உலகம் செய்தி

காங்கோ படகு விபத்தில் 40 பேர் பலி!!! 167 பேர் மாயம்

காங்கோவில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் மேலும் 167 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ ஆற்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் 189 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது படகில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாகவும், அதில் பொருட்கள் ஏற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோவில் படகுகள் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும்.

அதிக பாரம் ஏற்றுதல், பராமரிப்பின்மை மற்றும் இரவு வேளையில் பயணம் செய்வதன் காரணமாகவே இவ்வாறான படகு விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பல பயணிகள் லைப் ஜாக்கெட் அணியாததே இதற்கு முக்கியக் காரணம் என நம்பப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!