வட அமெரிக்கா

மெக்சிகோவில் உயரமான மலையில் ஏறிய 4 பேர் மரணம்

மெக்சிகோவின் மிக உயரமான Pico de Orizaba மலையை ஏறிக்கொண்டிருந்த நால்வர் விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நால்வரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்ட்டுள்ளனர். 5,600 மீட்டர் உயரங்கொண்ட பிக்கோ டெ ஒரிசபா (Pico de Orizaba) மலை, வட அமெரிக்காவின் ஆக உயரமான எரிமலையாகும்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் முயற்சி தொடர்வதாக அந்நாட்டின் அரசாங்கம் Facebook பக்கத்தில் தெரிவித்தது.

மலையின் தென்புறப் பகுதியிலிருந்து ஏறியபோது விபத்து நேர்ந்தது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், பெர்லா திஜெரினா (Perla Tijerina) எனும் மலையேறி, பிக்கோ டெ ஒரிசபா மலை உச்சியில் 32 நாள்கள் இருந்தார்.

மெக்சிகோவைச் சேர்ந்த அவர், துணிச்சலை வெளிக்காட்ட அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்