May 15, 2025
Breaking News
Follow Us
இந்தியா

சாக்லேட் வாங்கி கொடுத்து 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: சந்தேகநபர் கைது

4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேகநபர் மீது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மருதிபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் (43). இவரது மனைவி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இரண்டு வார காலமாக இருந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிய 10 வயதுள்ள சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமி தாயார் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.

தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை செய்ததில் இரண்டு வார காலத்தில் மேலும் இதேபோல் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்திரனை கைது செய்த மகளிர் காவல் துறையினர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே