4 டச்சு பத்திரிகையாளர்கள் கொலை – 3 எல் சால்வடார் ராணுவ அதிகாரிகளுக்கு சிறைதண்டனை

1982 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாட்டின் கொடூரமான உள்நாட்டுப் போரின் போது நான்கு டச்சு பத்திரிகையாளர்களைக் கொன்றதற்காக எல் சால்வடார் இராணுவத்தின் மூன்று முன்னாள் அதிகாரிகள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.
91 வயது முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் கர்னல் ஜோஸ் கில்லர்மோ கார்சியா, 93 வயது முன்னாள் காவல்துறை கர்னல் பிரான்சிஸ்கோ மோரன் மற்றும் 85 வயது முன்னாள் காலாட்படை படைப்பிரிவின் தளபதி கர்னல் மரியோ அடால்பெர்டோ ரெய்ஸ் மேனா ஆகியோர் வடக்கு நகரமான சலடெனாங்கோவில் உள்ள ஒரு நடுவர் மன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
கொலைகளுக்காக மூன்று முன்னாள் அதிகாரிகளுக்கும் தலா 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக டியாரியோ எல் சால்வடார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)