இந்தியா

இந்தியாவில் லிஃப்ட் சென்ற 4 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி

இந்தியாவின் – உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள அம்ராபாலி குடியிருப்பு வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் இறந்தனர்.

இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து செல்ல முற்பட்ட போதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.

4 தொழிலாளர்கள் உயிரிழந்துடன் பலர் படுகாயமடைந்தனர். தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் நடந்த போது மின்தூக்கியில் 12 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதிக பாரம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!