இந்தியா

400க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து!

இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 4வது நாளாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 400 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இல்லாததே இந்த ரத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஒரு இண்டிகோ பயணியைக் கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தின் CISF-க்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

MP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!