ஆசியா

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சனிக்கிழமை பெய்த அதிகபட்ச மழையால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்குடன் எரிமலை சாம்பல் லாவாவும் பரவியது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பொதுமக்கள் பலர் தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

முக்கியமாக, கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர். சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Floods kill 37 in Indonesia's West Sumatra, 17 missing | SaltWire

உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காணாமல் போனவர்களையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

84 குடியிருப்புகளும் 16 பாலங்களும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த கனரக உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும் மக்களைத் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் மீட்புக் குழுவினரும் அதிகாரிகளும் ரப்பர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content