இந்தியா செய்தி

ஆந்திர பிரதேசத்தில் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற 35 வயது நபர் மரணம்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயதுர்கம் பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹரிஜன மதன்னப்பா இறந்து கிடந்ததை தியேட்டர் துப்புரவு பணியாளர்கள் கண்டுபிடித்தனர் என்று கல்யாணதுர்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரவிபாபு தெரிவித்தார்.

“அவர் எப்போது இறந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மேட்டினி நிகழ்ச்சிக்குப் பிறகு துப்புரவு ஊழியர்கள் அவர் இறந்துவிட்டார் என கண்டுபிடித்துள்ளனர்” என்று ரவிபாபு குறிப்பிட்டுள்ளார்.

மதன்னப்பா மது போதையில் மேட்டினி ஷோவுக்காக தியேட்டருக்குள் நுழைந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

“அவர் நான்கு குழந்தைகளின் தந்தை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் பிரிவு 194ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!