இலங்கை மூதூரில் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் லொறியுடன் மோதியதில் 33 பேர் படுகாயம்
மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மூதூரில் லொறியுடன் மோதியதில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





