பெலாரஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 31 உக்ரைனியர்கள் விடுதலை
பெலாரஸில்(Belarus) குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 31 உக்ரைனிய(Ukraine) குடிமக்களுக்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ(Alexander Lukashenko) மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனமான பெல்டா(Belta) செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் வேண்டுகோளின் பேரில் லுகாஷென்கோவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும்(Donald Trump) இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் நடாலியா ஐஸ்மாண்ட்(Natalia Eismont) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கியேவின்(Kyiv) கைதிகள் பரிமாற்ற ஒருங்கிணைப்புக் குழு 31 உக்ரைனியர்களின் விடுதலையை உறுதிப்படுத்தியுள்ளது.
“பெலாரஸில் இரண்டு முதல் 11 ஆண்டுகள் வரை பல்வேறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்களும் ஆண்களும் உக்ரைனுக்குத் திரும்பி வருகின்றனர்” என்று ஒருங்கிணைப்புக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட உக்ரேனியர்கள் தேவையான அனைத்து மருத்துவ பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுகளையும் பெறுவார்கள் என்று குழு தெரிவித்துள்ளது.





