உலகம் செய்தி

கனடாவில் 30 வயது இந்திய பெண் கொலை – காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

கனடாவின்(Canada) டொராண்டோவில்(Toronto) இந்தியப் பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

30 வயது ஹிமான்ஷி குரானாவின்(Himanshi Khurana) கொலை குற்றச்சாட்டில் தேடப்படும் 32 வயது அப்துல் கஃபூரி(Abdul Ghafoori) என்ற சந்தேக நபரைக் கைது செய்ய கனடா சட்ட அமலாக்கப் பிரிவு நாடு தழுவிய பிடியாணையை பிறப்பித்துள்ளது.

ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan Avenue) மற்றும் வெலிங்டன் ஸ்ட்ரீட் வெஸ்ட்(Wellington Street West) அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் ஹிமான்ஷி குரானாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “சந்தேக நபரின் படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம், இந்த நபர் எங்கே இருக்கிறார் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து காவல்துறையை அழைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!