உலகம் செய்தி

துருக்கியில் நடந்த மோதலில் 3 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 6 பயங்கரவாதிகள் மரணம்

வடமேற்கு துருக்கியில்(Turkey) டேஷ்(Daesh) போராளிகள் காவல்துறையினருடன் மோதியதில் மூன்று அதிகாரிகள் மற்றும் ஆறு போராளிகள் உயிரிழந்ததாக துர்க்கிஉள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்தான்புல்லின்(Istanbul) தெற்கே உள்ள யலோவா(Yalova) மாகாணத்தில் உள்ள எல்மாலி(Elmali) மாவட்டத்தில், போராளிகள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 15 மாகாணங்களில் டேஷ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகளில் யாலோவாவில் நடந்த நடவடிக்கையும் ஒன்று என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா(Ali Yerlikaya) குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!