கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தடுமாறிய 3 விமானங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற மூன்று விமானங்கள் சீரற்ற காலநிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதற்கயை மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என்பனற்றுக்கு அவை திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் இன்று காலை வேளையில் அடர்ந்த மூடுபனி காரணமாக இவ்வாறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881 மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகிய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
அத்துடன் சவுதி அரேபியாவின் தம்மத்திலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-254 இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை சீரான நிலையில், விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.





