இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் 3 முன்னாள் அமைச்சர்கள் விரைவில் கைது – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

உத்தியோகபூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவதில் தனிநபர்கள் ஈடுபட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக 3 முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நாட்டில் வாகனங்கள் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டபோதும் அமைச்சர்கள் வாகனங்களைக் கொண்டு வந்த ஒரு காலம் இருந்தது. அவர்கள் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுகிறார்கள். போலி நம்பர் பிளேட்களுடன் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!