மத்திய கிழக்கு

3 நாள் போர் நிறுத்தம், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு: மத்தியஸதம் வகிக்கும் கத்தார்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று நிலையில், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் காசாவில் 5 நாள் எத்தகைய தாக்குதலும் இல்லாத போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவுக்குமானால் பெண்கள் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக கத்தார் மத்தியஸ்தர்கள் ஹமாஸ் அமைப்பினர் தங்களது நிபந்தனைகளை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

3 நாள் போர் நிறுத்தத்திற்கு மாற்றாக 50 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!