ஆசியா செய்தி

பாகிஸ்தானில் ஒருவர் எரித்து மிகக் கொடூரமாக கொலை – 27 பேர் கைது

குர்ஆனை அவமதித்ததற்காக ஒருவரை சித்திரவதை செய்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் குர்ஆனை இழிவுபடுத்தியதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தினுள் புகுந்த சிலர் அங்கிருந்த சொத்துக்களைத் தாக்கி, வாகனங்களுக்கு தீவைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த நபரை அழைத்துச் சென்றதாக ஸ்வாட் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், அந்த நபரை கொடூரமாக தாக்கி, உடலில் தீ வைத்து எரித்தனர்.

அப்போது, ​​ஏராளமானோர் அங்கு திரண்டிருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 27 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!