சீரற்ற வானிலையால் 269 சுற்றுலா பயணிகள் பாதிப்பு!
நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 52 இந்தியர்கள் மற்றும் 40 பல்கேரிய நாட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





