இலங்கை செய்தி

இலங்கையில் புதிதாக 264 தொழு நோயாளிகள் பதிவு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரம் கூறுகிறது.

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

“2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகளைப் பதிவு செய்துள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை புதிதாக அடையாளம் காணப்பட்டவை. அதாவது 1,520 புதிய நோயாளிகள்.

மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,580  பேரில் 180 சிறுவர், சிறுமிகள் உள்ளனர். அதாவது 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள். 2024 முதல் காலாண்டில், 274 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் 264 பேர்.

274 இல் 21 பேர், அதாவது 8% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை. இந்த ஆண்டும், 8% மாற்றுத்திறனாளி நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.” என்றார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!