ஆசியா

பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் 250,000 மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 250,000 மக்களை இடம்பெயர்த்ததாகவும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பயிர்கள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டதாகவும், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் நாளைய தினமும் மழையுடன் கூடிய வானிலையே தொடரும் என்றும் அடுத்த வாரம் முதல் இந்நிலைமை தொடர கூடும் எனவும் அதிகாரிகள் முன்னுரைதுள்ளனர்.

ரவி, சட்லெஜ் மற்றும் செனாப் நதிகளின் ஓரத்தில் அமைந்துள்ள 1,432 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டது, சுமார் 1.2 மில்லியன் மக்களை பாதித்தது மற்றும் 248,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று மாகாண அமைச்சர் மரியம் ஔரங்கசீப் தெரிவித்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிட்டத்தட்ட 700 நிவாரண முகாம்களும் 265 மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்