இந்தியா செய்தி

தெலுங்கானாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்

தெலுங்கானாவின் சங்காரெட்டி(Sangareddy) மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயம்(myrmecophobia) காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2022ம் ஆண்டு திருமணமாகி மூன்று வயது மகளின் தாயான அந்தப் பெண், புடவையுடன் மின்விசிறியில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் சிறுவயதிலிருந்தே எறும்புகளுக்கு பயந்து வந்ததாகவும், ஏற்கனவே தனது சொந்த ஊரான மஞ்சேரியலில்(Manjeri) உள்ள ஒரு மருத்துவமனையில் ஆலோசனை பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “ஸ்ரீ, மன்னிக்கவும், இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. மகளை கவனித்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!