இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் திங்கட்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 49 times, 1 visits today)