இலங்கை செய்தி

புதிய நாடாளுமன்றில் 225 பிரதிநிதித்துவம் இருக்காது?

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அரசியல் கட்சிகள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பதை தாமதப்படுத்தினால், நவம்பர் 21 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களின் முழுப் பிரதிநிதித்துவமும் இருக்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 15 அல்லது 16 ஆம் திகதிகளில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகும் எனவும், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவிற்கும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம் ரத்நாயக்க, தேர்தல் திகதிக்கும் நாடாளுமன்றம் கூடும் திகதிக்கும் இடையில் சுமார் ஒரு வாரகாலம் உள்ளதால் எதிர்வரும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை பரிந்துரைப்பதில் தாமதம் செய்தால், நாடாளுமன்றம் கூடும் திகதிக்கு முன்னர் இந்தப் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட முடியாது.

இதனால், நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது 225 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மாட்டார்கள்.

முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும், முதல் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களின் முழு பிரதிநிதித்துவம் இல்லை.

கணிசமான காலதாமதத்தின் பின்னரே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில், தேசியப் பட்டியலில் பெயர் உள்ளவர் அல்லது தேர்தலில் போட்டியிட்ட ஒருவரை மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க முடியும்.

ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் தேசியப்பட்டியலில் இல்லாவிட்டாலும், அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வர அனுமதிக்கப்பட்டார்.

தேர்தலில் போட்டியிடாத அல்லது தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் முதலில் பொதுப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் இராஜினாமா செய்ததன் காரணமாக ஒரு ஆசனம் வெற்றிடமானால் மட்டுமே எம்.பி.யாக நியமிக்க முடியும்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை