குஜராத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் கைது
குஜராத்(Gujarat) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) மற்றும் நவ்சாரி(Navsari) காவல்துறை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாகக் கூறப்படும் 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
நவ்சாரியின்(Navsari) சரக்வாட்(Sarakwad) பகுதியில் ஃபைசான் ஷகில் சல்மானி(Faizan Shakil Salmani) என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் ராம்பூரில்(Rampur) உள்ள துண்டாவாலாவைச்(Dhundawala) சேர்ந்த ஃபைசான், நவ்சாரியில் தையல்காரராகப் பணிபுரிந்து வந்தார்.
அவர் தனது சொந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதத்தை பரப்ப சதித்திட்டம் தீட்டியதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையின் போது குறித்த இளைஞரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஆறு துப்பாக்கி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், அரபு மற்றும் உருது மொழிகளில் 29 பக்க இலக்கியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




