டெல்லியில் 21 வயது இளைஞர் தற்செயலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணம்

வடகிழக்கு டெல்லியின் பஜன்புராவில் தனது தந்தையுடன் நடந்த மோதலில் 21 வயது இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக மார்பில் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நபர் சச்சின் குமார் என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிகிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இரவு வீடு திரும்பிய பிறகு, சச்சின் குமார் தனது குடும்பத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கோபத்தில், தனது தந்தையின் உரிமம் பெற்ற இரட்டை குழல் துப்பாக்கியை பிடுங்கி, தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டியதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அவரது தந்தை அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, துப்பாக்கி தற்செயலாக சச்சினின் மார்பில் குண்டு பாய்ந்தது.இதனால் அவர் உயிரிழந்துள்ளார்