ஆஸ்திரேலியா செய்தி

பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் – விசேட விசாரணை தீவிரம்

  • December 29, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டாய் கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள நியூ சவுத் வேல்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் விடுக்கப்பட்ட மேலதிக பாதுகாப்பு கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும், அன்றைய தின பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பதையும் முதல்வர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இத்தகைய இடர்களைத் தவிர்க்க, அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் சமூகப் பாதுகாப்புக் குழுக்களுக்கு (CSG) துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு எமனாக மாறியுள்ள “வாகன விபத்து”! நூற்றுக்கணக்கானோர் பலி!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கையில் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இம்முறை அதிகரித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இதுவரையில் வீதி விபத்துகளால் 2 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. கொழும்பில் இன்று (29) போக்குவரத்து பொலிஸாரால் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. […]

உலகம்

எல்லையில் துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீனா : உச்சம் தொட்ட பதற்ற நிலை!

  • December 29, 2025
  • 0 Comments

அமெரிக்கா தைவானுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், தைவான் மற்றும் சீனாவிற்கு இடையிலான பதற்ற நிலை சமீபகாலமாக உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் சீனா, தைவானைச் சுற்றி  இன்று இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேரடி-துப்பாக்கிச் சூடு  பயிற்சிகளுக்காக இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ரொக்கெட் படை ஆகியவை அனுப்பப்பட்டுள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தைவானின் ஜனாதிபதி அலுவலகம் சீனாவின் பயிற்சிகளை   சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானவை என்று விமர்சித்துள்ளது. தைவானை சுற்றி […]

உலகம்

இந்தோனேசியாவில் தீவிபத்து – உடல் கருகி பலர் பலி! அடையாளம் காண போராடும் காவல்துறையினர்!

  • December 29, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு சுலவேசி (Sulawesi) மாகாணத்தின் தலைநகரான மனாடோ (Manado)  நகரில் உள்ள டமாய் (Damai) முதியோர் இல்லத்தில் நேற்று இந்த தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காண  முயற்சித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு எரிந்துள்ளதாக காவல்துறை அதிகாரி […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் புதிய மைல் கல்லை எட்டியது இலங்கை!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 797 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வருடமாக 2025 பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்திருந்தனர். இதுவே இதுவரை காலமும் சாதனை எண்ணிக்கையாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் […]

அரசியல் இலங்கை செய்தி

விருந்து வைத்தது உண்மைதான்: சர்ச்சை வீடியோ குறித்து ஹிருணிக்கா விளக்கம்!

  • December 29, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர Hirunika Premachandra விருந்துபசாரமொன்றின்போது ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதாலதான் அவர் விருந்து வைத்து, கொண்டாடுகின்றார் என சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திர விளக்கமளித்துள்ளார். அவர் கூறியவை வருமாறு, “ நானும்,எனது தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற நிகழ்வொன்று தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. கடுவலை தொகுதியில் ஐக்கிய […]

உலகம் செய்தி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் முழுமையான போரில் ஈடுபடும் ஈரான்!

  • December 29, 2025
  • 0 Comments

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian), தனது நாடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் “முழுமையான போரில்” ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மோதல் 1980களில் இடம்பெற்ற  ஈரான்-ஈராக் போரை விட மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த போரினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கத்தேய சக்திகள் ஈரானை ஒவ்வொரு அம்சத்திலும் முற்றுகையிட்டு, பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்குவதாகவும்  அவர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலிய […]

அரசியல் இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி நிலை: பின்னணி என்ன?

  • December 29, 2025
  • 0 Comments

தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் Auditor General பதவிக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் முற்படவில்லை என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe தெரிவித்தார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரையை அரசமைப்பு சபை நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் கணக்காய்வாளர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றது. தமக்கு விசுவாசமானவரை நியமிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இழுபறி நிலையை கையாள்கின்றது […]

உலகம்

கனடாவில் வேலை வாய்ப்பில் அதிகரித்த சலுகைகள் – புதிய வேலைகளை தேடும் மக்கள்!

  • December 29, 2025
  • 0 Comments

கனடாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் வரும் ஆண்டில் புதிய வேலையைத் தேடத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 2000  வேலை செய்யும் அல்லது வேலை தேடும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டின் முதல் பாதியில் வேலைகளை மாற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இது ஜூலை 2025 உடன் ஒப்பிடும்போது 07 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வை நடத்திய ரோபர்ட் ஹாஃப் (Robert Half) நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

உலகம் செய்தி

ஈரானுக்கு கைக்கொடுத்த ரஷ்யா : வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக்கோள்!

  • December 29, 2025
  • 0 Comments

ரஷ்யா 03 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. பயா (Paya), கோவ்சர் (Kowsar) மற்றும் ஜாஃபர்-2 (Zafar-2) என அழைக்கப்படும் மூன்று ஈரானிய செயற்கைக் கோள்கள் நேற்று கிழக்கு ரஷ்யாவில் உள்ள வோஸ்டோக்னி (Vostochny) ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் பயா (Paya) என அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஈரான் இதுவரை விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்களில் முதன்மையானது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள் 3 மீட்டர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைக் கொண்டுள்ளதாகவும், அவை நீர்வளம், […]

error: Content is protected !!