இலங்கை செய்தி

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் வறுமையில் வாழ்ந்த இரு நண்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!

  • December 17, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பன்னாவில் (Panna) இரண்டு இளைஞர்கள் அரிய வகை வைரக்கல்லை எடுத்துள்ளனர். சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இருந்து அந்த கல்லை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட குறித்த கல் 15.34 காரட் எடைக்கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. “இந்தக் கல்லின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை சுமார் ஐந்து முதல் ஆறு மில்லியன் ரூபாயாகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா, இந்தியாவின் மிகவும் […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டுப்பிடிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்  ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள கால்தடங்களில்  சில 40 செ.மீ (15 அங்குலம்) விட்டம் கொண்டவை எனக் கூறப்படுகிறது. மேலும் பலவற்றில் கால் விரல்கள் மற்றும் நகங்களின் தெளிவான தடயங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் மிலனின் வடகிழக்கில் உள்ள ஸ்டெல்வியோ (Stelvio national park) தேசிய பூங்காவின் சில கிலோமீற்றர் தொலைவில் புகைப்படக் கலைஞர் ஒருவர்  […]

இலங்கை

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நிறைவடையும் வரையில் இவரது பதவிக்காலம் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை

புலிகளுடனான சமாதானப் பேச்சுகள் – தூசுத்தட்ட மீண்டும் தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார். ‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவரங்களை இந்தப் புத்தம் வெளிப்படுத்தும் என புத்தகத்தை வெளியிட உள்ள விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் […]

உலகம்

ஈரானில் கைது செய்யப்பட்ட நர்கஸ் முகமதி உடல் ரீதியான காயங்களுக்கு உள்ளானதாக தகவல்!

  • December 17, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) கடந்த வாரம் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு முறை மருத்துமவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வடகிழக்கு நகரமான மஷாத்தில் (Mashhad) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடல் ரீதியான பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முகமதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முகமதி கைது செய்யப்பட்ட பின்னர் அவருடன் தொலைபேசியில் சுருக்கமாகப் பேசியதாகவும், அவசர சிகிச்சை […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் 10 வயது மாணவரை குத்திக் கொன்ற இளைஞர் : விசாரணையில் வெளியான தகவல்!

  • December 17, 2025
  • 0 Comments

ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் 10 வயது மாணவர் ஒருவர் பிற மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று கோர்கி-2  (Gorki-2) கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 15 வயதுடைய சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை காயப்படுத்தியதாகவும், 10 வயது சிறுவனை குத்தி கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரை  கைது செய்ய ஆயுதமேந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏராளமான மாணவர்கள் பாதுகாப்பான  இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் உடமையில் வெடிப்பு சாதனம் […]

உலகம் செய்தி

சீனாவில் முக்கிய மூலப்பொருளை உரிமம் இன்றி ஏற்றுமதி செய்த 27 பேர் கைது!!

  • December 17, 2025
  • 0 Comments

ஏற்றுமதி உரிமம் இன்றி ஆன்டிமனி இங்காட்களை ( antimony ingots) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த 27 சீன பிரஜைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனா உலகின் மிகப்பெரிய ஆன்டிமனி உற்பத்தியாளராக உள்ளது. இது பேட்டரிகள், சில்லுகள், சுடர் தடுப்பு மருந்துகள் மற்றும் வெடிமருந்துகள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் மற்றும் பலவற்றை தயாரிப்பதற்கு  மூலோபாய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆன்டிமனி இங்காட்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது. இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

error: Content is protected !!