செய்தி

இலங்கையில் 2025 ஆண்டு கல்வித் தவணை அட்டவணை வெளியீடு

இலங்கையில் 2025ம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணையை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய முதலாம் தவணை 3 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது.

அதன் முதற் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 14ம் திகதி வரை இடம்பெறும். முதலாம் தவணையின் 2ம் கட்டம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை இடம்பெறும். 3ம் கட்டம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி முதல் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெறுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணையானது மே மாதம் 14ம் திகதி முதல் ஓகஸ்ட் 07ம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

இறுதி தவணையான மூன்றாம் தவணை இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதுன் அதன் முதற்கட்டம் ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 17ம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் நவம்பர் மாதம் 17ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 19ம் திகதி வரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!