ஐரோப்பா

பிரான்ஸில் தடையை மீறி வீதிக்கு இறங்கிய 2,000 பேர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தடையை மீறி பொலிஸாரின் வன்முறைக்கு எதிராக சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணி நடத்தியுள்ளனர்.

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பதின்ம வயது இளைஞர் பொலிஸாரால் கொல்லப்பட்டார்.

சென்ற வாரம் பிரான்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் வன்முறை எதிர்ப்பு நினைவுப் பேரணி இடம்பெற்றுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கறுப்பின பிரெஞ்சு நபர் அடாமா டிராவ்ரெ (Adama Traore) உயிரிழந்தார்.

தற்போது அவருடைய குடும்பத்தினர் பாரிசில் சட்டவிரோத நினைவுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பொது அமைதிக்குப் பாதிப்பு நேரும் சாத்தியம் அதிகம் என்பதால் பேரணியை அனுமதிக்கமுடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!