மத்தியப் பிரதேசத்தில் நான்கே நாட்களில் 200 கிளிகள் மரணம்
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) கார்கோன்(Khargone) மாவட்டத்தில் உள்ள நர்மதா(Narmada) நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக குறைந்தது 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்வா(Padwa) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழி பாலம் அருகே கடந்த நான்கு நாட்களில் இந்த கிளிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மீட்பு நடவடிக்கைகளின் போது சில கிளிகள் உயிருடன் இருந்தன, ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா(Tony Sharma) குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி உணவு விஷம் மற்றும் முறையற்ற உணவு முறையே இறப்புகளுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் நீர்வழி பாலம் அருகே உணவளிப்பதைத் தடைசெய்து சம்பவ இடத்தில் ஊழியர்களை நியமித்துள்ளனர்.





