இலங்கை – இரத்தினபுரி சிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் துஷ்பிரயோகம்: கீதா குமாரசிங்க
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/New-Project-45-1-1280x700.webp)
இரத்தினபுரியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் வார்டன் ஒருவரின் கணவர், பராமரிப்பில் இருக்கும் 20 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் மேலும் நான்கு குழந்தைகளின் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் இருந்து மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)