பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துள்ளன
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





