இந்தியா செய்தி

திருமணத்தை மறுத்த காதலன் – ஆசிட் குடித்த 19 வயது டெல்லி பெண்

டெல்லியில் 19 வயது பெண் ஒருவர், ஏழு வருடங்களாக காதலித்து வந்த தனது காதலன், பல உறுதிமொழிகள் அளித்தும் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ரேஹான் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், அந்தப் பெண்ணிடம் தனது அடையாளத்தை போலியாகக் காட்டி, திருமண சாக்கில் அவருடன் உடல் ரீதியாக உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், 20 வயதுடையவராக நம்பப்படும் ரேஹான், அந்தப் பெண்ணை இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ரேஹான் கைது செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அந்தப் பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நம்பப்படுகிறது.

காயங்களிலிருந்து அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துளள்னர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!