பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் பலி

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளந்தாவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், அதைத் தொடர்ந்து வைஷாலியில் 4 பேர், பங்கா மற்றும் பாட்னாவில் தலா இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஷேக்புரா, நவாடா, ஜெகனாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும், மோசமான வானிலையின் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)