இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய 1700 வைத்தியர்கள் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்

இலங்கையில் நான்கு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 1700 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களில் கிட்டத்தட்ட 500 நிபுணர்கள் உள்ளனர். தரவு அறிக்கைகளின்படி 1655 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் கடந்த நான்கு வருடங்களில் 573 வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அத்துடன், 1082 வைத்தியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறிய அதிகளவான வைத்தியர்கள் எண்ணிக்கை 706 ஆகும். தரவு அறிக்கைகளின்படி, 2020 இல் 106 மருத்துவர்களும், 2021 இல் 259 மருத்துவர்களும், 2022 இல் 584 மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் சமூக அரசியல் அமைப்பில் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளனர்.

தற்போது ஒரு வைத்தியர் எழுநூற்று ஐம்பது நோயாளர்களை பரிசோதித்து வருவதாகவும், இதன் காரணமாக ஆரம்ப சுகாதார சேவை சீர்குலைந்துள்ளதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!