ஒடிசாவில் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிப்பு

ஒடிசாவின் கோபால்பூரில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, கியோஞ்சர் மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் குற்றம் பதிவாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
டெண்ட்லபாஷி கிராமத்தில் இளம் பெண்ணின் உடல் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அதில் காய அடையாளங்கள் காணப்பட்டுள்ளது.
வீட்டின் அருகிலுள்ள நெல் வயலில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், பாண்டபாடா காவல் நிலையத்தால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு 70(2), 103(1) BNS மற்றும் POCSO சட்டத்தின் பிரிவு 4(2)/6 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதான குற்றவாளி சாகு நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.