இந்தியா

மும்பை விமான நிலையத்தில் பாங்காக்கிலிருந்து வந்த பயணியிடமிருந்து 16 வெளிநாட்டு பாம்புகள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட 16 அரிய வகை பாம்புகளை மும்பை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பேங்காக்கிலிருந்து மும்பை வந்த விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஜூன் 29ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையில் பயணி ஒருவரின் உடைமைகளிலிருந்து 16 உயிருள்ள அரிய வகை பாம்புகளை அதிகாரிகள் மீட்டனர்.

அவற்றில் இரண்டு கென்ய மணல் போவாக்கள், ஐந்து காண்டாமிருக எலி பாம்புகள், மூன்று அல்பினோ பாம்புகள், ஒரு கலிபோர்னியா கிங்ஸ்னேக், இரண்டு கார்டர் பாம்புகள், ஒரு அல்பினோ எலி பாம்பு, இரண்டு ஹோண்டுரான் பால் பாம்புகள் அடங்கும்.

இதனையடுத்து, பாம்புகளைக் கடத்திய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணை தொடர்கிறது

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!