செய்தி தமிழ்நாடு

16 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்பு

சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் நாராயணசாமி இவர் வீட்டு மனை பிளாட்டுகள் விற்பனை செய்து வருகிறார் கடந்த 2005 ஆம் ஆண்டு போலியான வரைபடம் மூலமாக விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா லே-அவுட் உள்ள பார்க் சைட் 36 செண்டை அபகரித்துள்ளார் இதனை அடுத்து கோவை மாநகராட்சி கடந்த மூன்று முறை நாராயணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நோட்டீசுக்கு பதிலளிக்காத நாராயணசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போது கோவை மாநகராட்சி ஜேசிபி வாகனம் மூலம் 36 சென்ட் இடமும் அதற்குள் கட்டப்பட்ட இரண்டு சென்ட் வீடு தரைமட்டம் ஆக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இதன் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் எனக் கூறப்படும் இந்த நிலையில் நாராயணசாமி இதே போல போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டாரா என சரவணம்பட்டி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!