குவைத்தில் பணிபுரியும் 155,000 இலங்கை தொழிலாளர்கள்: குவைத் பிரதமரை சந்தித்த ஜனாதிபதி
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/New-Project-27-1280x700.jpg)
2025 உலக அரசாங்கங்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (11) பிற்பகல் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவை சந்தித்தார்.
கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க, முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் விரிவாக்கப்பட்ட சாத்தியக்கூறுகளை வலியுறுத்தி, இலங்கையின் மேம்பட்ட அரசியல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சந்தைகளை பன்முகப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர். பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய மூலோபாய முயற்சிகளை ஆராய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு வழங்கிய ஆதரவிற்காக, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அதன் பங்களிப்பை அங்கீகரித்து, பிரதமர் அதிமேதகு ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் குவைத் அரசுக்கும் ஜனாதிபதி திஸாநாயக்க நன்றி தெரிவித்தார்.
மேலும், குவைத்தில் ஏறத்தாழ 155,000 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்புவதாகவும், இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அவர்களும் சென்றிருந்தார்.