இந்தியா

டெங்கு தொற்றால் கேரளாவி்ல் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 15 பேர் டெங்கிக் காய்ச்சலால் இறந்துவிட்டனர்.நடப்பாண்டில் அங்கு இதுவரை 2,450 பேருக்கு டெங்கித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் டெங்கி தொற்ற அதிக வாய்ப்புள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருப்பதாகச் சுகாதாரத் துறை மதிப்பிட்டுள்ளது. அதிகரித்துவரும் வெப்பநிலை, டெங்கித் தொற்றை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கோடை மழையைத் தொடர்ந்து கேரளாவில் பரவிவரும் டெங்கிக் காய்ச்சல் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. பெரும்பாலோருக்கு இலேசான அறிகுறிகளே இருந்தாலும், மீண்டும் டெங்கி தொற்றும்போது உடல்நிலை மிகவும் மோசமாகலாம்.

சென்ற ஆண்டு அங்கு 20,568 பேருக்கு டெங்கித் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் 53,688 பேரை டெங்கி தொற்றியிருக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டது. இலேசான அறிகுறிகளே தோன்றுவதால் டெங்கி பாதிப்பு பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே