ஐரோப்பா

ஸ்வீடனில் ஒரு வாரத்திற்கு மூடப்படும் 140 ஆண்டுகள் பழைமையான பூங்கா!

ஸ்வீடன் தலைநகரில் உள்ள க்ரோனா லண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக பூங்காவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வருகை தந்ததுடன், மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.

மேலும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

குறித்த விபத்தினால் 140 ஆண்டுகள் பழமையான பூங்கா குறைந்தது ஒரு வாரமாவது மூடப்பட்டிருக்கும் எனவும் இது பொலிஸாரின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!