செய்தி

சீனாவின் ஜின்ஜியாங்கில் பள்ளிக்கூட நெரிசலில் சிக்கி 14 பேர் படுகாயம்!

சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாநில நடுநிலைப் பள்ளியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 14 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (நவம்பர் 18) பிற்பகல் 3.25 மணியளவில் காஷ்கரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று நகர நிர்வாகத்தின் சமூக ஊடகத்தில் வெளியான அறிக்கை தெரிவித்தது.

மாணவர்கள் தங்குவிடுதிக்கும் வகுப்பறைக் கட்டடத்திற்கும் இடையே சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு மாணவர் கதவருகே விழுந்துவிட்டதாகவும் அதன் பிறகு ‘தள்ளுமுள்ளு’ ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. கண்காணிப்புக்காக அவர்கள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி