ஐரோப்பா

பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : 14 வயது சிறுவர் ஒருவர் கைது!

பிரித்தானியாவின் – பர்மிங்காமில் நடந்த ஒரு பயங்கரமான கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹால் கிரீனில் உள்ள ஸ்க்ரைபர்ஸ் லேன் அருகே 12 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், காயங்களின் விளைவாக துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து ஏதாவது தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைகளுக்கு உதவுமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 64 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்