இலங்கை ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்கள்

மாதம்பே, புனித செபஸ்டியன் பாடசாலையின் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
குறித்த மாணவர்களின் உடல்கள் சிவப்பு நிறமாக மாறி அரிப்பு தன்மை ஏற்பட்டதை, கவனித்த வகுப்பாசிரியர் மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அடிப்படை சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)