இலங்கை

இலங்கையில் 2 நாட்களில் 12 பேர் மாயம் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்

கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், நாதகுடியிருப்பு தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் யட்டயன வளர்ச்சி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயது சிறுமியும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் தப்பிச் சென்றுள்ளதாக பிரதான கண்காணிப்பாளர் கட்டுநாயக்க பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும், எடரமுல்லைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குவர்.

மேலும், நோர்வூட்டில் வசிக்கும் 82 வயதான பெண், மொரட்டுவையில் வசிக்கும் 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதான கூலித்தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆணும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்