செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

மேற்கு பிரேசிலிய மாநிலமான ஏக்கரின் தலைநகரான ரியோ பிராங்கோ விமான நிலையத்திற்கு அருகே சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் நிறுவனமான ஏஆர்டி டாக்ஸி ஏரியோவால் இயக்கப்படும் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை உட்பட அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர் என்று ஏக்கர் மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணங்கள் இப்போது ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற சிறிய நகரத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்தது.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!