ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
மேலும் தெஹ்ரானில் இருந்து சொந்த ஏற்பாடுகளில் வெளியேறக்கூடிய மற்ற இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)