ஆப்பிரிக்கா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

உகாண்டாவில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி விபத்து – 11 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இதனால் லாரியின் டாங்கரில் இருந்த பெட்ரோல் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெட்ரோலை எடுப்பதற்காக லாரி முன் குவிந்தனர்.

அப்போது திடீரென லாரியில் தீப்பற்றியது. பெட்ரோலில் தீ பிடித்து லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!