ஆசியா

11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இயங்கும் சவுதி அரேபிய, சிரியத் தூதரங்கள்

11 ஆண்டுகளின் பின்னர் சவுதி அரேபியாவும் சிரியாவும் அவற்றின் தூதரகங்களை மீண்டும் செயல்படுத்த முடிவெடுத்துள்ளன.

11 ஆண்டுகளாக இருநாடுகளின் உறவில் விரிசல் நீடித்தது. நோன்பு மாதத்துக்குப் பிறகு தூதரகங்களை மீண்டும் திறக்க அவை திட்டமிட்டுள்ளது.

மேலும் இருநாடுகளின் துணைத் தூதரச் சேவைகளை மீண்டும் தொடங்கப் பேச்சுவார்த்தை நடைபெறுவதைச் சவுதி அரேபிய அரசாங்கத் தொலைகாட்சி உறுதிப்படுத்தியது.

சவுதி அரேபியாவும் ஈரானும் அவற்றின் உறவைச் சீர்ப்படுத்தும் முக்கிய உடன்பாட்டில் 2 வாரங்களுக்கு முன்னர்  கையெழுத்திட்டன.

பரந்த அரபு வட்டாரத்துக்குச் சிரியா மீண்டும் திரும்பத் தூதரகச் செயல்பாடுகள் வழியமைத்துத்தரும்.

உள்நாட்டுப் போருக்கு இடையே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஸாத் (Bashar Al Assad) கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதைக் கண்டித்து 2011ஆம் ஆண்டு அரபு லீக், சிரியாவைத் தற்காலிகமாக விலக்கி வைத்தது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!