இந்தியா செய்தி

குடியரசு தினத்தன்று ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

குடியரசு தினத்தன்று ராஜஸ்தானின்(Rajasthan) நாகௌர்(Nagaur) மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து ஏராளமான வெடிபொருட்களை காவல்துறையின் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஹர்சௌர்(Harsaur) கிராமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 187 சாக்குகளில் 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்(ammonium nitrate) ஒரு வயலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஹர்சௌர் கிராமத்தைச் சேர்ந்த சுலேமான் கான்(Suleman Khan) சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்று குற்ற வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெடிபொருட்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!