ஆசியா

சீனாவில் மண்ணிற்குள் புதையுண்ட 10 வீடுகள் : 30 பேரை தேடும் அதிகாரிகள்!

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் இன்று (08.02) ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் மண்ணுள் புதையுண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீடுகளில் வசித்து வந்த சுமார் 30 பேரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜுன்லியன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அவசரகால மேலாண்மை அமைச்சகம் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்களை அனுப்பியது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மேலும் சுமார் 200 பேர் இடம்பெயர்ந்தனர் என்று மாநில ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து மலையிலிருந்து பாறைகள் அடிக்கடி உருண்டு வருவதாகவும், சில சமயங்களில் பட்டாசுகளைப் போன்ற ஒலிகளை எழுப்புவதாகவும் ஒரு கிராமவாசி குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!