இலங்கை

இலங்கை: பேருந்து – வேன் விபத்தில் 10 ஆடைத் தொழிலாளர்கள் காயம்

கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று 10 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த வேன் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கந்தகெட்டியவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகெட்டிய – பதுளை பிரதான வீதியின் போபிட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனில் இருந்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை மற்றும் கந்தகெட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்